Friday, September 02, 2005

சிறுவர் பூங்கா

அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் - இந்த புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறீர்களா? நான் சின்ன வயதில் ரொம்பவும் விரும்பிப் படித்த புத்தகங்கள். வளர்ந்தாலும் இந்த புத்தகங்கள் எங்கேயாவது கிடைத்தால் படிப்பேன். இந்த புத்தகங்கள் இன்னமும் என்மனதில் பசுமையாக இருக்கின்றன. இது போக ஸ்பைடர்மேன், ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி போன்ற புத்தகங்களும் மிகவும் பிடித்தவை. என் குழந்தைகளுக்கு தமிழ் படிக்கச் கற்றுக் கொடுத்து இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

சமீபத்தில் தான் சிறுவர் பூங்கா என்ற இந்த வலைப்பதிவை படிக்க நேர்ந்தது. மிகவும் நேர்த்தியாக சிறப்பாக செய்து வருகிறார் பரஞ்சோதி. இவரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. நான் மிகவும் ரசித்துப் படிக்க ஆரம்பித்திருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பாராட்டுக்களையும் மறக்காமல் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

Related Posts