Saturday, November 13, 2004

தீவாளி...

for picture version of this post click here

காசைக் கரியாக்கினது போக இந்த தீபாவளிக்கு பவுண்டையும் சந்தோஷமாகக் கரியாக்கினோம். மனைவி தயவில் தீபாவளி லேகியம் இல்லாமல் இந்த முறை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் டிப்பிக்கல் தேசி தீபாவளி சிறப்பாக கழிந்தது. "உங்க நினைப்பாகவே இருக்கு; தீபாவளிக்கு குழந்தைகள் இல்லையே...என்ன செய்ய..; அங்க வெடியெல்லாம் போடமுடியுமோ?; ஏதுடா இது தீபாவளிக்கு லீவெல்லாம் விடமாட்டாளா? எல்லாருக்கும் என்ன ட்ரெஸ் எடுத்தே?" போன்ற சம்பாஷணைகளுக்குப் பிறகு சன் டி.வி பட்டிமன்றம், சினிமா, நட்சத்திரங்கள் பேட்டி என்று சாயங்காலம் வரை சோபாவில் படுத்த வண்ணமே சிறப்பாக கழிந்தது.
தீபாவளி அன்னிக்காவது சோபாவை விட்டு நகரக் கூடாதா என்று அடிக்கடி அடுக்களையில் பிஜிலி வெடித்தாலும்...என்ன தான் சொல்லுங்கள்...அப்பிடியே படுத்துக் கொண்டு பட்சணங்களை கொறித்துக் கொண்டே நடிகை ஜிகினா தேவியின் மலரும் நினைவுகளைப் பார்ப்பதே ஒரு அலாதியான சுகம் தான்.

சாயங்காலம் பவுணடை கரியாக்கும் வைபோவம். பட்டாசு இல்லாத தீபாவளியெல்லாம் ஒரு தீபாவளியா? அதுக்கு அம்மாவசையே எவ்வளவோ மேல்.(ஸ்கூல் படிக்கும் போது அம்மாவசை அன்னிக்கு அப்பா மாமா எல்லோரும் அதிகாலையிலேயே தர்பணம் செய்யப் ஆத்தங்கரைக்குப் போய்விடுவார்கள்..லேட்டா எந்திரிக்கலாம்...ஜாலி) குழந்தைகளோடு சேர்ந்து வண்ண வண்ணமாகக் கரியாக்கினோம். ராக்கெட் பெரிது பெரிதாகக் கிடைத்தாலும், ஊர் மாதிரி யார் வீட்டிலாவது புகுந்து விட்டால் ஓடி ஒளிய முடியாதென்பதால்...அடுத்த வருடம் (ஒளிந்து கொள்ள நல்ல இடமாக பார்த்துக் கொண்டு) ஒரு கை பார்த்துக் கொள்ளலாமென்று முடிவு செய்துள்ளோம். 2000 வாலா இல்லாது தான் ஒரு சின்னக் குறை. அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களின் நிலையை நினைத்துக் கொண்டு மனதை தேற்றிக்கொண்டோம்.

உங்க வீட்டுல கொண்டாட்டமெல்லாம் எப்பிடி?

No comments:

Post a Comment

Related Posts